Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி.

No image available

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது ஆண், திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

நீரிழிவு நோய், இருதய பிரச்சனை உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து இன்று உயிரிழந்தார்.

கொரோனா நோய்த் தொற்றினால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *