Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கிரேன் ஆப்ரேட்டர் வீட்டில் 7 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் குடியிருப்பு காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் மகாராஜா (36). இவர் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான BHEL நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம் போல் ஆறு மணிக்கு பணிக்கு சென்று விட்டார். பின்னர் அவரது மனைவி, தனது மகளை பள்ளியில் கொண்டு விடுவதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டு திருவெறும்பூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நீண்ட நேரத்திற்கு பிறகு திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் பீரோவும் உடைக்கப்பட்டு 7 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து உடனடியாக கணவர் மகாராஜாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் திருட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெல் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பெல் நிறுவனம் மற்றும் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெல் பாதுகாவலர்கள் பணியில் இருக்கும் பொழுது பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை போன சம்பவம் பெல் குடியிருப்பு வாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *