Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகர வாய்க்காலில் முதலைகள் நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்

திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது. இதுப்பற்றி தகவலறிந்த வனத்துறையினர் ஆற்றில் சென்று முதலை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். மேலும் இப்பகுதியில், பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் திருச்சி தீரன்நகர் அருகே கோரையாற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று ஆற்றின் கரையோரம் படுத்து ஓய்வெடுத்தது. ஒரு மணி நேரம் படுத்திருந்த அந்த முதலை திடீரென தண்ணீருக்குள் பாய்ந்து சென்று மறைந்தது. இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் கோரையாறு கரையோர பகுதியில் முதலை படுத்து இருந்தது.

இதைக்கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மேய்ச்சலுக்காக செல்கின்றன. குடியிருப்பு பகுதிகளும் அதிகமாக உள்ளன. அந்த பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதால் அந்த பகுதியை கடந்து செல்வோர் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.

இதேபோல் வயலூர் ரோட்டில் உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரத்திலும் நேற்று முதலை தென்பட்டது. இதைக்கண்டு அங்கு ஏராளமானோர் கூடினர். சமீபகாலமாக கோரையாறு, உய்யகொண்டான் வாய்க்கால்களில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அசம்பாவித சம்பவம் ஏதும் நடப்பதற்கு முன்பாக வனத்துறையினர் முதலைகளை பிடித்து பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *