Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

சேதப்படுத்திய லாரி – அபராதம் வசூலித்தும் மாற்றாமல் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம்

திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர் 11வது வார்டு வாத்துக்காரத் தெருவில் பிப்ரவரி 5 ஆம் தேதி மதியம் இந்த தெருவில் உள்ள மின்கம்பம் மீது ஒரு லாரி மோதியதால் அந்த மின் கம்பம் பலத்த சேதமடைந்துவிட்டது. அன்று உடனே மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டு மின்கம்பத்தை சேதப்படுத்திய லாரி ஓட்டுனரிடம் முறையான அபராதம் பெற்று கொண்டனர்.

அடுத்த நாளே வந்து வேற மின்கம்பம் மாற்றி தருவதாக அங்கிருக்கும் பொது மக்களிடம் மின்வாரிய பணியாளர்கள் தகவல் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் இன்று பிப்ரவரி 11 தற்போது வரை 6 நாள் ஆகியும் மின்கம்பத்தை மாற்றாமல் அப்படியே அதே நிலையில் தான் உள்ளது. ஆனால் அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் அங்கிருக்கும் பொதுமக்கள் மின்வாரியத்திற்க்கு தொலைபேசியில் அழைத்து இது சம்மந்தமாக புகார் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் எங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தான் வந்து அதை மாற்ற முடியும் என்று பேச்சை முடித்து கொள்கிறார்கள்.

அந்த பகுதியில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அதிகமாக நடமாடுகிறார்கள். ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் முன் அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டுமென இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *