Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கல்லூரியில் மாணவி மரணம் – பரபரப்பு போலீஸ் குவிப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் தனியார் கல்லூரி (தனலட்சுமி சீனிவாசன்) செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி மகள் தாரணி (19). முதலாம் ஆண்டு பி.டெக் பாட பிரிவை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தார்.

கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்த தாரணி நேற்று விடுதியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் கல்லூரி விடுதிக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள், பெற்றோர்கள் குவிந்துள்ளனர். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆர்டிஓ விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது மட்டுமின்றி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்படும் விளக்கம் முன்னுக்கு பின் முரணாக உள்ளதாக மாணவியின் பெற்றோர் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *