Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

குடியரசு தின விழாவில் பாதுகாப்பு படையின் சாகாசம்

74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி மைதானத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் தேசிய கொடியை ஏற்றி ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களின் மோனோ நாடகம் மற்றும் ராக்கி, மேக்ஸ், லக்கி என்ற மூன்று மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் ரயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு திருச்சி கோட்டை மேலாளர் மனிஷ் அகர்வால் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *