Monday, September 29, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எல்.ஐ.சி, எஸ்பிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில்  ஆர்ப்பாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர், மாநில செயல் தலைவரும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் ஆகியோர்களின் ஆலோசனையின் படியும்  திருச்சி ஒத்தக்கடை பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு பின்னால் அமைந்துள்ள எல்ஐசி அலுவலகத்துக்கு முன்னால் இன்று காலை எல்ஐசி எஸ்பிஐ சொத்துக்களை மோசடியாக அதானிக்கு தாரைவார்த்த மத்திய மோடி பாஜக அரசை கண்டித்துதமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் தலமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில துணைத்தலைவர்  சுப சோமு மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் மற்றும் மாமன்ற உறுப்பினர் நாச்சி குறிச்சி ஆனந்தி அருண் பிரசாத் இவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

இதில் திருச்சி மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ஜி முரளி காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் ஜெயம் கோபி திருச்சி கிழக்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது ரஃபி சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் நாச்சி குறிச்சி அருண் கல்லுக்குடி குமார் அருண் வக்கீல் அணி பிரிவு அம்ஜித் கோகுல் கிருபாகரன் வனஜா அல்லூர் பிரபு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் எல்ஐசி தேவதாஸ் கண்ணன் ஆழ்வார் தோப்பு ராஜா முகமது செந்தில் பாதுஷா பட்டேல் பிரஸ் பாபு சுதாகர் 16 வது வார்டு தலைவர் சுப்ரமணியன் சிந்தை வினோத் புவன் சரண் அட்டு மணி கிருஷ்ணமூர்த்தி நிர்மல் மகளிர் அணி அஞ்சு கோகுல்நாத் கம்பை ஐயப்பன் கம்பைமணி நாகமங்கலம் சீனிவாசன்  கண்ட்ரோல்மென்ட் பலன் ரோஸ் வீரமணி கிளமெண்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 பொதுமக்களுக்கு மோடி அரசின் மோசடிகள் குறித்து விளக்கமான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 
#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *