Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியிலிருந்து நாளை 28.06.2021 மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் விபரம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகாணம்) லிமிட். திருச்சி மண்டலம் 
செய்தி குறிப்பில் அறிவித்துள்ளவாறு மற்றும் நிலையான வழிகாட்டு 
நெறிமுறைகளின்படி 28.06.2021 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 
(கும்படீகாணம்) லிமிட். திருச்சி மண்டலம் மூலம் 735 பேருந்துகள் (80%) திருச்சி, பெரம்பலுர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பல்வேறு வழித்தடங்கள் பேருந்து இயக்கம்

அனுமதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மற்றும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எல்லைபகுதி வரை கீழ்கண்டுள்ளவாறு பேருந்துகள் இயக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

1.) திருச்சி – கரூர் வழித்தடத்தில் பெட்டவாய்தலை வரை.

2.) திருச்சி – சேலம் வழித்தடத்தில் தொட்டியம் மேக்கல்நாயக்கன்பட்டி வரை.

3.) திருச்சி – தஞ்சாவூர் வழித்தடத்தில் வாழவந்தான்கோட்டை வரை.

4.) துறையூர் – சேலம் வழித்தடத்தில் மங்கம்பட்டி வரை.

5.) துறையூர் – நாமக்கல் வழித்தடத்தில் பவித்திரம் வரை.

6.) பெரம்பலுர் – ஆத்தூர் வழித்தடத்தில் வீரகனுர் வரை.

7.) அரியலூர் – தஞ்சாவூர் வழித்தடத்தில் திருமானூர் வரை.

8.) ஜெயகொண்டம் – கும்பகோணம் வழித்தடத்தில் அணைக்கரை வரை

இவை தவிர மற்ற மாவட்டங்களுக்கு வழக்கமான இயக்க பகுதி முழுவதும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *