Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கர்நாடக முதலமைச்சரை கண்டித்து திருச்சியில் தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பாக ஜீயபுரம் கடைவீதியில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற அணையை கட்டியே தீர்வேன் என்று கூறிய கர்நாடாக அரசின் முதலமைச்சரை கண்டித்தும், மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாவேந்தர் வரவேற்றார். தேவேந்திர குல வேளாளர்கள் சங்கத்தின் தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். தேவேந்திகுல வேளாளர்கள் பேரமைப்பின் மாநில பொது செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டினால் அந்த அணையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு, சமூக நீதிப் பேரவை ரவிக்குமார், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலக்பாமா ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *