Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் 6 நாட்கள் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை

தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி (எண் 574/06.08.2021) கொரோனா நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறுற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிக்கப்படுள்ளது.

இதன் ஒருபகுதியாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வருகிற ஆகஸ்ட் மாதம் 27, 28, 29 தேதிகள் மற்றும் செப்டம்பர் மாதம் 3, 4, 5 தேதிகளில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை என்ற விபரம் பக்தர் களுக்கு தெரிவித்து கொள்ளப்படுகிறது. அனைத்து சன்னதிகளிலும் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு பூஜைகள் வழக்கம் போல் நடை பெறும்.

பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கும்மாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *