Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் அண்ணா மறைவு பக்தர்கள் இரங்கல்

திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் வசித்து வந்த 89 வயதான   கிருஷ்ண ப்ரேமி சுவாமி (31.08.2023) இரவு 1.40 மணிக்கு அரங்கன் அடி சேர்ந்தார். பக்தர்களால் ஸ்ரீ அண்ணா என்று அழைக்கப்படும் இவர், திருச்சேங்கனூரில் (31.08.1934) ஸ்ரீ ஜெயந்தி அன்று பிறந்தார்.ஸ்ரீமத் பாகவதம் தான் அவர் மூச்சாக இருந்தது.

பஜன பக்திக்கு புத்துயிர் வழங்கினார். நூற்றுக்கணக்கான பஜனை பாடல்களை ஸம்ஸ்க்ருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் பக்தியுடன் பாடியுள்ளார். 108 திவ்யதேசத்து எம்பெருமான்கள் மீதும் ஸம்ஸ்க்ருதத்தில் கீர்த்தனைகள் பாடி உள்ளார்.

இதை தவிர ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் நூற்றுக்கணக்கான நூல்கள் இயற்றி உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *