Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

20 கிலோமீட்டர் சைக்கிளில் ஆய்வு நடத்திய டிஐஜி ஆனிவிஜயா!!

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளநிலையில் சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், காவல்துறையினரின் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி டிஐஜி அலுவலகம் முதல் திருச்சி புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர் வரை திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி ஏர்போர்ட், செம்பட்டு வழியாக மாத்தூர் வரை உள்ள சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, திருச்சி புதுக்கோட்டை கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருந்த நிலையில்,

திருச்சி ஏர்போர்ட் சோதனைச்சாவடி, எம்ஐடி, மற்றும் திருச்சி புதுக்கோட்டை எல்லையான மாத்தூர் சோதனை சாவடிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதோடு காவல்துறையினரின் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையம் மாத்தூர் காவல் நிலையம் உள்ளிட்டவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.

டிஐஜி கிட்டதட்ட 20 கிலோமீட்டர் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *