Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

குடிநீர் உறிஞ்சிய வீடுகளுக்கு இணைப்பு துண்டிப்பு – மோட்டார்கள் பறிமுதல்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4 வார்டு, எண் 62 பஞ்சப்பூர், செங்குறிச்சி பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் இன்று காலை திடீர் ஆய்வு செய்தனர். செங்குறிச்சி பகுதியில் நான்கு வீடுகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 4 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநகர பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும். குடிநீர் உறிஞ்சுவதால் பொதுமக்கள் சீராக குடிநீர் பெற முடியவில்லை. தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சினால் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.

குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

                                             

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *