Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மொழி தெரியாதவர்களால் அவமரியாதை – டேங்கர் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ளது வாழவந்தான் கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கு இயங்கி வருகிறது. சென்னையில் இருந்து குழாய் வழியாக பெட்ரோல், டீசல் கொண்டு வந்து இங்கு சேமிக்கப்பட்டு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால், கரூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு டேங்கர் லாரி மூலம் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தின் கோரிக்கைகளாக ஓட்டுனர் மட்டும் கீளினர் லோடு பிடிக்க ஐ ஒ சி எல் அடையாள அட்டையை வைத்துள்ள அனைத்து வண்டிகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். டீலர் வண்டிகள் காலையில் லோடு பிடிப்பதற்கு அனுமதிக்கவும், மதியம் உணவு இடைவேளை இல்லாமல் தொடர்ந்து லோடு பிடிக்க அனுமதிக்கவும்,

இபாஸ் காலதாமதம் ஆகாமல் அடித்துக் கொடுக்க வேண்டும். லோடு இறங்காத பங்கிற்க்கு லோடு போடுவதை தவிர்க்கவும், லோடு பில்லிங் ஸ்லிப்பில் உள்ள நேர கட்டுப்பாட்டை தவிர்க்கவும், அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த பணத்தை சரி செய்ய வேண்டும். ஏசி கே பெயிண்டிங் செய்யும் பங்கிற்கு லோடு கொடுப்பதை தவிர்க்கவும், முதல் நாள் மது அருந்தி இருப்பது கருவி மூலம் கண்டறியப்பட்டால் மூன்று நாள் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

அனைத்து வண்டிகளிலும் இலாக் சரி செய்து கொடுக்க வேண்டும். மொழி தெரியாதவர்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கில் வேலையில் அமர்த்தி உள்ளதால் அவர்கள் லாரி டிரைவர் மற்றும் இளைஞர்களை அவமரியாதையாக நடத்துவதாகவும் கூறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *