Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை நகராட்சியின் பொதுநிதியிலிருந்து சொக்கலிங்கபுரம் முதல் மாமுண்டி ஆறு வரை கால்வாய் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (15.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மணப்பாறை நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்,  58 கட்டிடங்கள் மற்றும் 244 திறந்தவெளி கடைகள் மற்றும் நடைபாதை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் காய்கறி வாரச்சந்தை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்            மா.பிரதீப் குமார், இன்று (15.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் வைத்திநாதன், மணப்பாறை நகராட்சி தலைவர் கீதா ஆ. மைக்கேல் ராஜ், நகராட்சி ஆணையர்  எஸ்.என்.சியாமளா, நகராட்சி பொறியாளர் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *