Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் விடுதலைச் சிறுத்கைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் குரு அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆலோசனைப்படி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனையில் கூட்டத்தில் டிச.23ல் திருச்சி சிறுகனூரில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாடு குறித்தும், அனைத்து ஒன்றிய, நகர பகுதிகளில் முகாம் மறுசீரமைப்பு கூட்டமைப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசு, துணை பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், மண்டல செயலாளர் அ.க. தமிழாதன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஏசி பாவரசு பேசுகையில்…… எழுச்சி தமிழரின் அரசியல் முன்னெடுப்பு அனைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பெண்கள் இளைய தலைமுறையினர் அனைவரும் சிறுகனூரில் நடைபெறும் மாநாட்டு திடலுக்கு வரவேண்டும் எழுச்சி தமிழரின் ஒற்றை குரலாக இருக்க வேண்டும் என எழுச்சித்தமிழர் வெற்றி பெறுவதற்காக சிறுகனூரில் நடைபெறும்

மாநாட்டிற்கு இந்த நாட்டை காப்பாற்றுவதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பிற்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக சகோதரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக சமத்துவத்தை நிலைநாட்டப்படும் என்பதற்காக நடைபெறும் இந்த மாநாட்டிற்கு அனைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *