Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகள் 08.05.2022 அன்று காலை 
9.00 மணி முதல் திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

விதிமுறைகள் : 

போட்டியில் கலந்துகொள்ளும் கிளப், தனியார், பொது நிறுவன அணி  வீரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு அணியும் குரூப் போட்டோ கொண்டு வருதல் வேண்டும்.

முதல் போட்டியின் போது தங்கள் அணியின் 16 வீரர்கள் பெயர்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் சீருடை நெம்பருடன் கலந்துக் கொள்ள வேண்டும். நுழைவு விண்ணப்பத்தில் வீரர்கள் படிக்கம் பள்ளி, கல்லூரி, கிளப் முகவரி மற்றும் வீட்டு முகவரியுடன் அனுப்ப வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் அணியினை நிறுத்தவோ, நீக்கவோ நிர்வாக கமிட்டியின் அதிகாரத்திற்கு உட்பட்டது. வெற்றி பெறும் அணி மண்டல அளவிலான வளைகோல்பந்து போட்டியில் 
கலந்துக் கொள்ள தகுதி பெறுகிறார்கள்.

போட்டிகள் இந்திய வளைகோல்பந்து 
கழகத்தின் (IHF) விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும். நுழைவு விண்ணப்பத்தினை 07.05.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகம் 
அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி-23 என்ற முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி – 620023 (போன் : 0431-2420685) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *