Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற 33 பேருக்கு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் வாழ்த்து

திருச்சி மாவட்டத்தில் தலைமைக் காவலர்களிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தமிழக காவல் துறையில் கடந்த 1997-ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணி புரிந்த காவல் ஆளிநர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, காவல் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாத 33 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

 பதவி உயர்வு பெற்றவர்களை 20.05.2022 இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், அனைவரும் காவல் நிலையத்திற்குச் சென்று துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்டு வழக்குகளை உடனுக்குடன் தீர்வுகண்டு சிறப்பாக பணிபுரிய பாராட்டுக்களை தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *