Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் 15 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சேர்ந்த 50 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். நேற்று நடைபெற்ற வேட்பு மனுக்கள் மீதான பரிசோதனையில் 49 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதில் 8வது வார்டில் அதிமுக வேட்பாளர் எஸ்.இளங்கோ, திமுக வேட்பாளர் கருணாநிதி ஆகியோர் மட்டுமே வேட்பு மனு செய்திருந்தனர். அதிமுக வேட்பாளர் உறுதிமொழி ஆவணம் வழங்காததால் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் திமுக வேட்பாளர் வே.கருணாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் திமுகவிற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *