Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சமத்துவ நாள் கொண்டாட்டம் -திருச்சியில் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை:

தமிழக முதல்வர் கழகத் தலைவர் அவர்களால் முதல்முறையாக சமத்துவ நாளாக ஏப்ரல் 14 சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  வழிகாட்டுதலின் பேரில் அம்பேத்கர் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

                      திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்காரின் திருவுருவ படத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என் சேகரன்  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

          கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களால் சமத்துவநாளாக அறிவிக்கப்பட்ட தினமான இன்று அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சமத்துவ புறங்களிலும் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு ஒன்றிய கழகச் செயலாளர்களால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ்,வண்ணை அரங்கநாதன்,என் கோவிந்தராஜன் N.செந்தில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் கே எஸ் எம் கருணாநிதி இராமசாமி சின்னஅடைக்கன் பகுதிக் கழகச் செயலாளர்கள் நீலமேகம் மோகன் டி பி எஸ் எஸ் ராஜாமுகமது மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

          சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *