Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திமுக என்றால் ஊழல் பாஜக என்றால் திட்டம் – திருச்சியில் பாஜக தேசிய செயலாளர் சிடி ரவி பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் பாஜக தேசிய செயலாளர் சிடி ரவி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்.. பாரதிய ஜனதா கட்சியின் இலக்கு இந்தியாவை வல்லரசு ஆக்குவது நாட்டை வலுப்படுத்துவது. 5G அலைக்கற்றையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக திமுக குற்றம்சாற்றுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்…. அதற்கு ஆதாரம் இருந்தால் ஆதாரத்துடன் குற்றச்சாட்டட்டும். திமுக தனது குடும்பத்திற்காக செயல்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி நாட்டிற்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பிரதானமாக செயல்பட்டு வருகிறது.

திமுகவும் காங்கிரசும் கூட்டணியில் இருந்த போது தினமும் ஊழல் என்ற செய்தி தான் வந்தது. தற்பொழுது பாரதிய ஜனதா ஆட்சியில் தினம் ஒரு திட்டம் என்ற செய்தி மட்டுமே வந்து கொண்டுள்ளது. திமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு எங்களின் இலக்கு குறிக்கோள் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்துவது மக்கள் பிரச்சினைகளை எடுத்து அதற்கு தீர்வு காணுவது திமுக ஒரு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியை கிண்டல் அடித்தது.

தற்பொழுது பிஜேபி தமிழகத்தில் வளர்ந்து வருவதைப் பார்த்து திமுக பயப்படுகிறது. அண்ணாமலையின் தாக்கம் பிஜேபி வளர்ந்து வருவதை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஜவஹர்லால் நேரு காலத்தில் பாரதிய ஜனதாவை மிகவும் கேலி செய்தார்கள். தற்பொழுது மத்தியில் ஆட்சியில் உள்ளோம். தமிழ்நாட்டிலும் மெதுவாக பாரதிய ஜனதா வளர்ந்து வருகிறது.

வருகின்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்து வலிமையான தமிழ்நாட்டை மாற்றுவோம். திமுக குடும்பத்திற்காக உழைக்கிறது. பாரதிய ஜனதா நாட்டை வலுப்படுத்துவும் நாட்டு மக்களுக்கு உழைக்க மட்டுமே உள்ளது. பின்னர் கார் மூலம் சிதம்பரம் புறப்பட்டு சென்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *