Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

2026 ல் மீண்டும் திமுக ஆட்சி, திமுக தலைவர் முதல்வராக மீண்டும் பொறுப்பு ஏற்பார் என்பதை உறுதி ஏற்போம் – திருச்சி துறையூரில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

திருச்சி மாவட்டம் துறையூரில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு அலுவலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பேருந்து நிலையப் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திரு உருவ சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்..

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையம் அருகில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என் அருண்நேரு அலுவலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், உடன் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர், 

தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞரின் திரு உருவ சிலையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பேசுகையில்….. துறையூர் தொகுதி ஒருமுறை மட்டுமே மாற்று கட்சிக்கு போயிருக்கிறது. மற்ற அனைத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளதாகவும், என்றும் என்றைக்கும் திமுக தான் துறையூரில் வெற்றி பெறும் என அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான நேரு பேசினார்.

தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பேசிய போது…… கலைஞர் கொள்கைகளை லட்சியங்களை ஒவ்வொரு தொகுதியிலும் கொண்டு போய் சேர்க்கிறோம், அவருடைய திட்டங்களை செயல்படுத்துகிறோம், 

இபிஎஸ் எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயரை வைப்பதாக கேட்கிறார், நல்ல நல்ல திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதற்க்கு பதிலாக கர்ப்பான்பூச்சி பெயரையா வைப்பது, நான் யாரை சொல்கிறேன் என உங்களுக்கு தெரியும். உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி எதற்கு கொடுத்தீர்கள் என கேட்பது இபிஎஸ்க்கு தகுதி கிடையாது.

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை பரப்புரையில் ஆரம்பி க்க திமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார், பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வெற்றி கொடுத்தீர்கள், வருகிற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தலைவர் குறிப்பிட்டுள்ளார், 

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் திருச்சியில் பேசியபோது பொதுக்கூட்டத்தில் எங்கள் கூட்டணிக்கு வருவதற்க்கு 100 கோடி கேட்கிறார்கள் என பேசியுள்ளார், எந்த கட்சிக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்கா. என கேள்வி எழுப்பினார். சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும். மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்க போகிறது. திமுக தலைவர் தான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என கூறினார், 

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *