Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் மருத்துவர் தற்கொலை

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த இளஞ்சூரியன் (29) திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் திருச்சிக்கு அபே அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த சக மாணவர்கள் அவசர உறுதி மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு இளஞ்சூரியனை கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிர் இருந்ததாக தெரிவித்தனர். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டே மாதத்தில் மருத்துவ படிப்பு முடிய உள்ள நிலையில் மருத்துவக் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட குறித்து அவர் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து கண்டோண்மென்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *