Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மயங்கிய பெண்ணிற்கு 2 மணி நேரமாக சிகிச்சை அளிக்க வராத டாக்டர்கள் – திருச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட அவலம்!!

No image available

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தாய் சேய் நல மையமும் இயங்கி வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் கொரனோ தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் திருவானைக்காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வருவதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. 

Advertisement

இந்த நிலையில் திருவானைக்காவல் அருணா நகரைச் சேர்ந்த தனது தாத்தாவுக்கு தடுப்பூசி போடுவதற்காக அவரை அழைத்துக்கொண்டு பெண் ஒருவர் வந்தார். சிறிது நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்தில் அந்தப் பெண் மயங்கி விழுந்தார். ஆனால் அந்தப் பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முன்வரவில்லை. இதனால் 2 மணி நேரமாக மயக்க நிலையிலேயே அப்பெண் இருந்துள்ளார்.

பின்னர் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களிடம் அங்கிருந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய அலுவலகத்தில் உட்கார வைத்து பெண்ணுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்ட அவலம் ஏற்பட்டது.

108 ஆம்புலன்ஸ் வந்தது மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்களின் அலட்சியத்தால் மயங்கி விழுந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கூட இரண்டு மணி நேரம் தாமதமான அவலம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *