Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் நாய்கள் கண்காட்சி – க்யூட்டாக வாக்கிங் சென்ற நாய்கள் – ஆச்சரியத்துடன் கண்டு கழித்த வளர்ப்பு நாய் பிரியர்கள்

உயரக நாய்கள் வீடுகளில் வளர்க்கப்பட்டாலும், வயதான காலத்தில் அவற்றை வீட்டை விட்டு துரத்தி விடுகின்றனர் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாகவும், நாய்களினால் ஏற்படும் ரேபிஸ் நோய் உள்ளிட்ட கருத்துக்களை மையமாக வைத்து திருச்சி விமான நிலையம் அடுத்து மொராய் சிட்டி பகுதியில் பெட் கேலக்ஸி அமைப்பு சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. 

இக்கண்காட்சியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது சேலம் கோயம்புத்தூர் சென்னை மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாக்சர், டோபர்மேன், கிரேடன், செர்மன் செப்பர்டு, ஆஸ்திரேலியன் புல்டாக், பக், டாக்சன்ட், பிகில், ஆப்கான் கவுன்ட், டாய் பொமோரியன், கோல்டன் ரெட்ரீவர், சிஜூ, ஹஸ்கி நாய்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க நாய் இனங்களான சிப்பிபாறை, கோம்பை, கன்னி, ராஜபாளையம், உள்ளிட்ட 35 வகையான இனங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் பங்கேற்றன.

பல்வேறு பிரிவுகளில் நாய்களுக்கான தேர்வுகள் நடந்தன. இதில் வல்லுனர்கள் நடுவர்களாக சிறந்த செல்லப்பிராணிகளை தேர்வு செய்தனர். இதில் ஒட்டுமொத்த போட்டியில் வெற்றி பெறும் செல்லப்பிராணிக்கு 25 ஆயிரம் ரொக்க பரிசும், முதல் பரிசாக 15,000, இரண்டாவது பரிசாக 10,000, மூன்றாவது பரிசாக 5000 வழங்கப்படுகின்றன.

இந்த செல்லப்பிராணி கண்காட்சியில் சிறிய வகை நாய் முதல் பயமுறுத்தும் வகையில் நாய்கள் வரை இடம் பெற்றிருந்தன. ஒரு சிலர் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு கால்களில் சாக்ஸ், பேண்ட், சட்டை, கண்ணுக்கு கூலிங் கிளாஸ் போன்றவைகளை வைத்து அழகுப்படுத்தி கண்காட்சியில் இடம்பெற செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *