Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நன்கொடையாளர் 5000 லட்டுகள் வழங்கினார்

தமிழக முதலமைச்சர் உத்திரவின்படி   இத்திருக்கோயிலில் கடந்த 23.O4.2022 முதல் நாள் முழுவதும் பிரசாதம் அதிரசம், லட்டு, மைசூர்பாகு, தேன் குழல் ஆகியவற்றில் ஒன்று திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை சுமார் 4000 பக்தர்களுக்கும், திருவிழா காலங்கள் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் சுமார் 8000 பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை வெளியிட்டது.

அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் குறித்த விபரமும் , நன்கொடையாளர்கள் வரவேற்கபடுகிறார்கள் என்ற விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் முதல் நன்கொடையாளராக திருச்சியை சேர்ந்த சரவணன் என்பவர் இன்று (10.05.2022) சுமார் 5000 லட்டுகளை உபயதாரர் நன்கொடையாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் பக்தர்களுக்கு வழங்கினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *