Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

‘திருச்சி விஷன்’ செய்தி எதிரொலி – 24 மணி நேரத்திற்குள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்த மாநகராட்சி அதிகாரிகள்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கலையரங்கம் திருமண மண்டபம் வழியாக செல்லக்கூடிய சாலையின் அருகே குடிநீர் குழாய் உடைப்பு செயற்கை நீரூற்று போல்  ஆறாக ஓடியது. நீர் வெளியேறும் பகுதி பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருப்பதால் அவ்வழியாக செல்லும் பேருந்து பள்ளத்தில் இறங்கி சென்றது.

இதனால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரிகள் மீது தண்ணீர்  தெரித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்தனர் ஆனால் முறையாக சரி செய்தாதலால் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியே வந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக குடிநீர் சாலையில் வழிந்தோடியது சாலை நடுவே ஒரு நீரூற்று போல காட்சியளித்தது இதனை உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வண்ணம் திருச்சி விஷனில் செய்தி வெளியாகியது.

இந்த செய்தியின் எதிரொலியாக திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து குடிநீர் வீணாவதை தடுக்கும் பொருட்டு உடனடியாக  சரி செய்துள்ளனர்.இதனால் அந்தச் சாலையினை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *