Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மன உளைச்சலில் முதியவர் தற்கொலை.

திருச்சி மாவட்டம் சமயபுரம் சோழன்நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி (83). இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி தானாக கீழே விழுந்ததில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பூரண குடைமடையாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17 ம் தேதி தனக்குத்தானே உடலில் மண்ணைண்னெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருக்கு 60% தீக்காயம் ஏற்பட்டது.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *