Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

பெட்ரோல், டீசல் தொடர் விலை உயர்வால் எலக்ட்ரிக் பைக் மீது பொதுமக்களின் பார்வை திரும்பியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி படுகைகளம் பகுதியினை சேர்ந்தவர் முருகேசன். இவர் சிங்கப்பூரில் எலக்ட்ரிசனாக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 5 மாதத்திற்கு மணப்பாறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

விடுமுறைக்கு தாயகம் வந்திருந்த முருகேசன் சனிக்கிழமை மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளார். அப்போது தனது எலக்ட்ரிக் பைக்கை தனது நண்பர் பாலு கடையில் விட்டுவிட்டு சென்றுள்ளார். இன்று காலை தனது கடையினை திறந்த பாலு எலக்ட்ரிக் பைக்கிலிருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அடுத்தகணமே பைக் தீப்பற்றி மளமளவேன எரியத் தொடங்கியுள்ளது.

உடனே அருகில் தண்ணீர் இல்லாத நிலையில் அருகிலிருந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மினரல் வாட்டர் கேன் நீரை கொண்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் தீப்பற்ரி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *