Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் போலி மதுவா? – வாலிபர் மருத்துவமனையில் அனுமதி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதுஉத்தமனூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன். இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் காலை 8 மணிக்கு வீட்டிற்கு வந்தார். மனைவியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பிரபாகரனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

கழிவறைக்கு சென்று சிறுநீர் கழித்த போது சிறுநீருடன் ரத்தம் வெளியேறியதை கண்டதும் வலியால் பதறி துடித்தார். கணவனின் நிலைமை கண்ட அவரை மனைவி உடனடியாக அருகில் இருந்த லால்குடி அரசு மருத்துவமனைக்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மீண்டும் வயிற்று வலி ஏற்படவே வலியால் மீண்டும் துடிதுடித்தார்.

உடனே மருத்துவரின் ஆலோசனைப்படி லால்குடி அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து பிரபாகரன் மனைவி திருச்சி லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் தனது கணவர் அதிகாலை 3 மணி அளவில் அருகில் உள்ள பூவாளூர் பின்னவாசல் அரசு மதுபான கடைக்கு சென்று பிளாக்கில் மது வாங்கி குடித்ததாகவும், அதன் பின்னரே வயிற்று வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இது குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *