Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் பெரிய திரையில் ஐபிஎல் கிரிக்கெட்டை கண்டு ரசித்த ரசிகர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் 2021 இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இந்த விறுவிறுப்பான போட்டியை திருச்சி எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் பேருந்து நிறுத்தம் அருகில் பெரிய திரை கட்டி அதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் கண்டுகளித்தனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் திருவிழா போன்ற கூட்டம் கூடியது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றதை ரசிகர்கள் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெரிய திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை எடமலைப்பட்டிப்புதூர் முன்னாள் கவுன்சிலர் முத்துசெல்வம் ஏற்பாடு செய்தது குறிப்பிடதக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *