Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

வீட்டில் உறங்கிய போது சுவர் இடிந்து விழுந்து விவசாய கூலி தொழிலாளி பலி!

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மருதூர் ஊராட்சியில் உள்ள கவுண்டர் தெருவில் வசிப்பவர் மருதை மகன் கோவிந்தன் என்ற 64 வயது விவசாய கூலித் தொழிலாளி . இவரது மனைவி பாப்பு. இவர்களது ஒரே மகளுக்கு திருமணம் முடித்து, கோவிந்தனும் இவரது மனைவி பாப்பு வும் இவர்களுக்கு சொந்தமான குடிசை வீட்டில் வசித்து வந்தனர். 

Advertisement

வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் கணவன் மனைவி இருவரும் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது சனிக்கிழமை அதிகாலை 6 மணிஅளவில் மனைவி பாப்பு இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள மறைவிடப் பகுதிக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் மண் சுவர் இடிந்து படுக்கையில் இருந்த அவரது கணவர் மீது கிடந்துள்ளது. அருகில் உள்ளவர்கள் உதவியுடன் இடிபாடுகளில் இருந்த கோவிந்தனை மீட்டு எடுத்த போது உயிரிழந்த நிலையில் இருந்தார்.

Advertisement

இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தன் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி் வருகின்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *