Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நிரந்தர நெல் கொள்முதல் இடமாக மாற்ற கோரி விவசாயிகள் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் முற்றுகை!!

Advertisement

திருச்சி குணசீலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது,ஆனால் குணசீலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல்லை பெற்றுக் கொள்வதில்லை என்றும்,விவசாயிகள் மூட்டையில் நெல்லை கொண்டு சென்றால் அதனை இறக்கி வைக்க கூட பாதுகாப்பான இடம் இல்லை என்று அப்பகுதி விவசாயிகள் சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

Advertisement

இதனை அடுத்து அப்பகுதி விவசாயிகள் இனைந்து கல்லூர் அருகே நெற் கொள்முதல் நிலையம் ஒன்றனை உருவாக்கி அங்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் கல்லூரில் நெற் கொள்முதல் செய்ய அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மற்றும் மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் தடையாக இருப்பதாக கூறி அப்பகுதி விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் திருச்சி தில்லை நகரில் உள்ள வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் அலுவலகம் முன்பாக முற்றுகையிட வந்தனர்.

அங்கு வந்த விவசாயிகளில் 10 பேரை மட்டும் அழைத்துக்கொண்டு காவல்துறையினர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விவசாயிகளை சந்தித்த செயலாளர் பரஞ்சோதி பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என்றதால் அதிர்ச்சியோடு திரும்பி சென்றனர்.

Advertisement

பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் விளைந்த நெல் பயிரை நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று வீடு திரும்ப முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து திரும்பினர். மேலும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தரவில்லை என்றால் அதிமுகவை விட்டு வேறு கட்சிக்கு செல்வோம் எனவும் தெரிவித்தனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *