Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டு நூதன போராட்டம்!!

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு பங்கேற்க செல்ல விடாமல் தன்னை தடுத்து வைத்திருப்பதை கண்டித்து, தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்‌ எலிக்கறி சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பாக அவர்களை காவல் துறையினர் கடந்த வாரம் திருச்சி ரயில் நிலையத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அவர் டெல்லி போராட்டத்திற்கு செல்ல விடாமல் காவல் துறையினர் தடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் தன்னையும், தன்னுடைய விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களையும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்காததை கண்டித்தும் தங்களை தடுக்க கூடாது என வலியுறுத்தியும் இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், கரூர் புறவழிச் சாலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், தங்களது வாயில் எலிகளை வைத்து கடித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமல் இனி எலிக்கறியை தான் சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப் நூதன போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

Advertisement

காவல் துறை அனுமதி அளிக்கவில்லையென்றால் அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்வேன் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *