Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் கர்நாடக முதல்வர் உருவ பொம்மையை விவசாயிகள் எரிக்க முயற்சி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பலரும் எடியூரப்பாவின் புகைப்படத்தையும், உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர்.

இதனால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *