Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் மகனை கொலை செய்த தந்தை கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவரங்கபட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வன் (45). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அமிர்தம் (40). இவர்களது மகன் ரவி என்ற பெரியசாமி (19). இவர் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான முத்துச்செல்வன் தினமும் குடித்து விட்டு வந்து, மனைவி அமிர்தத்திடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அவ்வப்போது மகன் ரவி தட்டிக்கேட்டுள்ளார். இதேபோல் கடந்த 17-ந் தேதி ரவி என்ற பெரியசாமி முத்துச்செல்வன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, ‘தினமும் குடித்துவிட்டு வந்து, அம்மாவிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டு முத்துச்செல்வனை, ரவி கண்டித்துள்ளார்.

இதனால் தந்தை மகனுக்கு இடையே வாய்த்தகராறு முற்றியது. ஒருக்கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்துச்செல்வன் கத்தியை எடுத்து மகன் ரவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் முத்துச்செல்வனை கைது சிறையில் அடைத்தனர். பெற்ற மகனையே தந்தை குடிபோதையில் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *