Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை திருச்சியில் எழுதும் தந்தை மகள் – 20 ஆண்டுகளாக தொடர் முயற்சியில் தந்தை…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சொந்த ஊராக கொண்ட இளங்கோவன் திருச்சியில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் ஒரு மகன். வேதியல் ஆசிரியராக பள்ளியில் பணியாற்றி வரும் இளங்கோவன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என எண்ணி 20 ஆண்டுகளாக தொடர் முயற்சியில் கஜினி முகமது படை எடுத்தது போல் தேர்வு எழுத படை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகள் மதுபாலாவும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தொடர்ந்து எழுதி வருகிறார். இந்த முறை இருவரும் தனித்தனியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தேர்வு மையங்களில் அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைக்கும். இந்நிலையில் இந்த முறை திருச்சி பொன்மலைபட்டியில் இருதய மேல்நிலைப்பள்ளியில் இருவரும் ஒன்றாக வந்து தேர்வு எழுதி வருகின்றனர்.

வெவ்வேறு அறைகளில் தந்தையும், மகளும் டிஎன்பிசி குரூப் 2 தேர்வை எழுதுகின்றனர். இருவரும் நிச்சயம் இந்த முறை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்வு எழுதுவதாக குறிப்பிட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *