Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிலிண்டர் கசிவால் தீ விபத்து – சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம் துறையூர் தென்புற நாடு நச்சிலிபட்டி பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி.அவரது மனைவி வசந்தா (55). இவர்களுக்கு வளர்மதி, வஞ்சிக்கொடி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பெரிய சாமியும், வசந்தியும் வயலில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

அப்போது சொசைட்டியில் பாலை கலந்து ஊற்றி விட்டு வருவதாக மகாமுனி சென்றதாகவும், மனைவி வசந்தாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு வீட்டிற்கு வெளியே தனது உறவினர்களுடன் மகாமுனி பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென வசந்தா அலரும் சத்தம் கேட்டு மகாமுனி அருகில் இருந்த பொதுமக்களும் சென்று பார்த்த போது மனைவி தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அருகில் வீட்டில் இருந்த பிரகாஷ் மனைவி சங்கீதா அவர் மீது சாக்கை போட்டு தீயை அணைத்தார்.

அப்போது உடலில் தீக்காயம் ஏற்பட்ட வசந்தா சிலிண்டரில் லேசான கசிவு இருந்ததாகவும், லைட்டை போட்டவுடன் தீ தன் மீது பற்றியதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வசந்தாவை மீட்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது தீக்காயங்கள் அதிகமாக இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வசந்தா கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வசந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *