Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

போலி ஆவணங்களை கொடுத்து வீட்டு கடன்பெற்று ஏமாற்றிய நபருக்கு ஐந்து வருட சிறை மற்றும் ரூ.10,000/- அபராதம்

திருச்சி மாநகரில் கடந்த (02.04.2008)-ந் தேதி கோட்டை காவல்நிலைய பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் போலி ஆவணங்களை கொடுத்து வீட்டு கடன் பெற்று ஏமாற்றியதாக பெறப்பட்ட புகாரின்பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவில் அண்ணாநகரை சேர்ந்த ஜான்சன் பூலாங்குடி காலனியை சேர்ந்த கண்ணன் (52), பாரதி நகரை சேர்ந்த புவனேஷ்வரி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பொறியாளர் அசோகன் ஆகிய 4 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் புவனேஸ்வரி மற்றும் அசோகன் ஆகியோர் இறந்து விட்டனர். ஜான்சன் என்பவர் தலைமறைவாகி அவர்மீது பிடிக்கட்டளை நிலுவையில் உள்ளது. இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த (06.04.2009)-ந் தேதி மேற்படி கண்ணன் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், மேற்படி கண்ணன் என்பவருக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனையும், ரூ.5000/-அபராதமும், அபராதம் கட்ட தவறினால் ஒரு வார கால சிறை தண்டனையும், மொத்தம் 5 வருடம் சிறைதண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *