Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அமராவதி அணையிலிருந்து 36,000 கன அடி உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்படும் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக காவிரி ஆற்றின் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நாளை (14.12.2024) காலை 6:00 மணி முதல் 25,000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட உள்ளது.

மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தினை பொருத்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதனால் காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கால்நடைகளை ஆற்றில் ஓட்டிச்செல்லவோ வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் சலவை தொழிளாலர்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *