திருச்சி விமான நிலையத்தில் மொபைல் போன் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்திய 4 லட்சத்து 96 ஆயிரத்து 450 ரூ மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை கோலாலம்பூருக்கு செல்லவிருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது.
2 ஆண் பயணிகள் செல்போன் சார்ஜர் மற்றும் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து கடத்தி வந்த இந்திய மதிப்பில் ரூபாய் 4 லட்சத்து 96 ஆயிரத்து 450 மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் இந்திய கரன்சிகளை
சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments