திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும், மேனாள் அமைச்சரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழகத்தின் செயலாளருமாகவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரால் பெரியார் விருது பெற்று, மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம் 105ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் அமைந்துள்ள அன்பில் சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன் முன்னிலை வாகித்தார். மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், நீலமேகம் தர்மராஜ், ராஜ்முஹம்மது, மணிவேல், விஜயகுமார், சிவக்குமார் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments