Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

மத்திய அரசு பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (STAFF SELECTION COMMISSION) மூலம் உதவி தணிக்கை அதிகாரி (Assistant Audit Officer), உதவி கணக்கு அதிகாரி (Assistant Account Officer), உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer), தணிக்கையாளர்(Auditor), ஆய்வாளர் (Central Bureau of Narcotics), வருமான வரித்துறை ஆய்வாளர்(CBDT) உள்ளிட்ட சுமார் 20,000 பணியிடங்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு அளவிலான சார்நிலைத் தேர்விற்கான(Combined Graduate Level Examination) அறிவிப்பாணை 17.09.2022 அன்று வெளிவந்துள்ளது.

இப்பணியிடங்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி உடைய வேலைநாடும் இளைஞர்கள் இணையவழியில் (www.ssc.nic.in) 08.10.2022 வரை விண்ணப்பிக்கலாம், இப்போட்டித்தேர்விற்கு நேரடி இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் 29.09.2022 அன்று முதல் துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள, திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *