திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வினோத் கண் மருத்துவமனை இணைந்து சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது.
நேற்று (19.01.2023) காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்கக்கூடிய ஓட்டுநர்கள், ஆட்டோ, கார், அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் கண் பார்வை சரியாக உள்ளதா என்ற பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது. வினோத் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments