Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பெண் தூய்மை பணியாளர்களுக்காக இலவச சுகாதார முகாம்

கீ அறக்கட்டளை, ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் உடன் இணைந்து, திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மண்டலம்-3ல் உள்ள பெண் தூய்மை பணியாளர்களுக்காக இலவச சுகாதார முகாமை இன்று ஏற்பாடு செய்துள்ளது. முகாமில் வழங்கப்பட்ட விரிவான சுகாதார சேவைகளின் மூலம் சுமார் 130 பெண்கள் பயனடைந்தனர்.

திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் வி.சரவணன், வட்டச் செயலாளர் முருகானந்தம், வார்டு-43 கவுன்சிலர் செந்தில், துப்புரவு அலுவலர் சுகந்தா பிரிசில்லா, தலைவிரிச்சான், வேதா நிறுவனத்தின் திட்ட அலுவலர், எம்.கிஷோர், வேதா நிறுவனத்தின் மனிதவள அலுவலர் தங்கபாண்டியன், , மற்றும் ஜே.பி ஹாஸ்பிடாலிட்டி நிர்வாக இயக்குநர் பிரிதிவ் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முகாமில் பெண் மருத்துவர்கள் தொழிலாளர்களை மேம்படுத்துவதற்கும் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் அவசியமான சுகாதார விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கினார்கள். NABL சான்றளிக்கப்பட்ட ஆய்வளங்களினால் சுமார் ரூ. 5000/- மதிப்புள்ள மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பதில் தூய்மை பணியாளர்களின் முக்கிய பங்கை அங்கீகரித்து, கீ ஃபவுண்டேஷன் மற்றும் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் ஆகியவை அவர்களின் நலனை ஆதரிக்க உறுதிபூண்டுள்ளன. இந்த அர்ப்பணிப்புள்ள பணியாளர்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த சுகாதார முகாம் வடிவமைக்கப்பட்டிருந்தது

முகாமின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் விழிப்புணர்வு : சுகாதார பணியாளர்கள் நோய் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது பதிவு: பங்கேற்கும் பெண்களிடமிருந்து அவர்களது மருத்துவ வரலாறு விவரங்களை சேகரித்து, பதிவு செய்யப்பட்டது. உயரம், எடை, இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, SPO2 போன்றவற்றைப் பதிவு செய்யப்பட்டது.

இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் : 

CBC, HBA1C, ரேண்டம் சுகர், தைராய்டு, கொலஸ்ட்ரால், கிரியேட்டினின், PAP, LIPID, சிறுநீரக செயல்பாடு சோதனை மற்றும் கல்லீரல் செயல்பாடு சோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஜே.பி ஹெல்த் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி ஊழியர்களால் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், ஆகஸ்ட் 16-ம் தேதி கண் மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், நீரிழிவு மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், உணவு நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய குழுவொன்று பொறியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும். கூடுதலாக, மன நலத்தின் முக்கியத்துவத்தையும், மன அழுத்தம் மற்றும் போதைப் பழக்கம் அதன் தாக்கம் குறித்து மனநல மருத்துவர்களினால் ஆலோசனைகள் வழங்கப்படும்.

கீ அறக்கட்டளையின் அறங்காவலர் ஜோசுவா, இந்த சுகாதார முகாமை ஏற்பாடு செய்வதில் உறுதுணையாக இருந்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்தார். நகரத்தின் பறைசாற்றப் படாத ஹீரோக்கள் ஆகிய தூய்மை பணியாளர்கள் நல்வாழ்வை உறுதிப்படுத்த இத்தகைய முயற்சிகள் அவசியம் என்று கீ அறக்கட்டளை உறுதிப்பட நம்புகிறது என்று கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *