Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கால்நடை மருந்தகத்தில் இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம்

இன்று 28.09.2024 உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு சுப்பிரமணியபுரம் கால்நடை மருந்தகத்தில் இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் கணபதி மாறன் முகாமை துவக்கி வைத்தார்.

திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் மும்மூர்த்தி முகாமிற்கு தலைமை தாங்கினார். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக திருமதி காஞ்சனா ரோட்டரி கிளப் திருச்சி பட்டர்பிளைஸ் President மற்றும் அவர்களின் கிளப்பின் திட்ட தலைவர் திருமதி நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுப்பிரமணியபுரம் கால்நடை உதவி மருத்துவர் கணேஷ்குமார் கூறியதாவது: இந்த சிறப்பு முகாமில் 56 நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு வெறிநாய் நாய் உரிமையாளர்களுக்கு கற்றுத்தரப்பட்டது. முகாமிற்கு வந்திருந்த அனைத்து நாய் உரிமையாளர்களுக்கும் திருமதி லட்சுமி கால்நடை ஆய்வாளர் மற்றும் திருமதி சரளா ஆகியோர் உதவினார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *