Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஜி கார்னர் மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நிறைவு – விரைவில் போக்குவரத்து அனுமதி?

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தில் ஒரு பகுதி சரிந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மற்றொரு பாலத்தின் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. 51 நாட்களுக்கு பிறகு பணிகள் முடிவடைந்து மீண்டும் ஐஐடியில் இருந்து பேராசிரியர் அழகு சுந்தரம் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினரால் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். வாகன போக்குவரத்தை தொடங்கலாமா? பாலத்தின் உறுதித் தன்மை அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின் மீண்டும் இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பாலத்தின் உறுதி தன்மையை சோதனை செய்ய பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு சென்சார் பொருப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் மேல் பகுதிகள் 30 டன் எடை கொண்ட லாரியை நிறுத்தி வைத்து ஆய்வு செய்யப்பட்டது அதில் பாலப்பகுதி ஒரு மைக்ரோ மில்லி மீட்டர் அளவு கீழ இறங்கினால் மீண்டும் சீரமைப்பு பணி தொடரும் இந்த ஆய்வின் முடிவில் பாலத்தின் உறுதித்தன்மையை நிரூபிக்கப்பட்டால் போக்குவரத்து தொடங்கும் என சென்னை ஐஐடி நிபுணர் குழுவினர் தெரிவித்தனர். இந்த பாலப்பணிகளால் கடந்த 51 நாட்களாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *