Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சின்னம் காட்சி மற்றும் விளம்பர பேரணி

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அதனை விளம்பரப்படுத்தும் வகையில் இன்று (08.01.2024) திருச்சிராப்பள்ளி கேம்பியன் பள்ளியில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சின்னத்தை காட்சிபடுத்தி, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் பரிசுகள் வழங்கி விழாப் பேருரையாற்றினார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2018-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது.

தற்சமயம் 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் களரிபயட்டு மற்றும் மல்லர்கம்பம் விளையாட்டுகள் திருச்சி மாநகரிலும், கூடைப்பந்து மற்றும் தாங்-டா விளையாட்டுகள் கோயம்புத்தூர் மாநகரிலும், கட்கா மற்றும் கோ-கோ விளையாட்டுகள் மதுரை மாநகரிலும், இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரில் நடைபெறவுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மல்லர்கம்பம் போட்டிகள் (21.01.2024) முதல் (24.01.2024) வரை மற்றும் களரிபயட்டு போட்டிகள் (27.01.2024) முதல் (29.01.2024) வரை திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கிலுள்ள உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அதனை விளம்பரப்படுத்தும் வகையில் இன்று திருச்சிராப்பள்ளி கேம்பியன் பள்ளியில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சின்னத்தை காட்சிபடுத்தி, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் பரிசுகள் வழங்கி விழாப் பேருரையாற்றினார். முன்னதாக இன்று காலை தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அதனை விளம்பரப்படுத்தும் வகையில் இன்று (08.01.2024) திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தந்த கேலோ இந்தியா பிரச்சார வாகனத்துடன் காவல்துறையினர் வாகனப் பேரணி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேரணி மற்றும் மாரத்தான் போட்டியை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்த விழிப்புணர்வு பேரணி பிரச்சார வாகனம் அண்ணா விளையாட்டரங்கத்திலிருந்து தொடங்கி டி.வி.எஸ்.டோல்கேட், தலைமை தபால் நிலையம், ஆர்.சி மேல்நிலைப்பள்ளி, இரயில்வே ஜங்சன், மத்திய பேருந்து நிலையம் வழியாக கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்தடைந்தது. இந்நிகழ்வுகளில், மாநகர காவல் துணை ஆணையர் செல்வக்குமார், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் வேல்முருகன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *