Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் மலைப்போல் குவிந்த குப்பை – நகரை தூய்மையாக்கிய தூய்மை பணியாளர்கள்

திருச்சி மாநகராட்சியில் கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய 5 கோட்டங்கள் உள்ளன. இந்த 5 கோட்டங்களிலும் சுமார் 2.40 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள், கடைகள் ஏராளமாக உள்ளன. திருச்சி மாநகரில் சராசரியாக ஒரு நாளைக்கு 400 டன் முதல் 450 டன் வரை குப்பைகள் சேரும். மக்கும் குப்பைகள் நுண் உரம் செயலாக்க மையங்களில் உரமாக மாற்றப்படும். 

இதனிடையே தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் முக்கிய கடைவீதிகளில் தற்காலிக கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் இருந்து வீசப்பட்ட பாலித்தீன் உறைகள், பாலித்தீன் பைகள், காகிதங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் வீசப்பட்ட பட்டாசு மற்றும் இனிப்பு காலிப் பெட்டிகள், வெடி காகிதங்கள், வாழை இலைகள் என இன்று மாநகரில் வழக்கத்தைவிட சுமார் 105 டன் குப்பை கூடுதலாக குவிந்தது.

தீபாவளி பண்டிகை நாளில் கோட்டம் தோறும் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 5 டன் குப்பை  பெரிய கடை வீதி, பர்மா பஜார், என்எஸ்பி சாலை, மேலரண் சாலை உள்ளிட்ட கடைவீதிகள் கொண்ட வரப்பெற்றது. தீபாவளி மறுநாளான நேற்று (13.11.2023) மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கடை வீதிகளில் வீசப்பட்டிருந்த குப்பைகளை அகற்றி மாநகராட்சி குப்பை வாகனத்தில் குப்பைகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தினர்.

தூய்மை பணியாளர்களை பொறுத்த அளவு மிக முக்கியமாக பொதுமக்கள் மற்றும் கடைகளில் இருப்பவர்கள் அனைவரும் குப்பைகளை முறையாக அவர்கள் சேகரித்து வைக்க வேண்டும் சாலைகள் முழுவதும் பாலிதீன் பைகள் வீசி செல்வதால் விபத்து ஏற்படுகிறது. எங்களுடைய பணி குப்பைகளை அகற்றி மாநகரை தூய்மையாக்குவது என பெருமைப்பட கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *