Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் கோலப்போட்டி – பரிசுகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மணிகண்டம் ஒன்றியத்தில், தீரன் மாநகர் பகுதியில், பெண்களுக்கான கோல போட்டி நடைபெற்றது.

இந்த கோலப்போட்டியில், ஏராளமான பெண்கள் வண்ண ரங்கோலி கோலமிட்டனர். மணிகண்டம் ஒன்றிய முன்னாள் சேர்மன் முத்துக்கருப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி கலந்து கொண்டு கோலங்களை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி, இலக்கிய அணி செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ராமு, முசிறி மைக்கேல் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *